ரெய்னாவின் வருங்கால மனைவி பிரியங்கா யார், என்ன படித்துள்ளார்?
காசியாபாத்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நிச்சயமிக்கப்பட்ட பிரியங்கா சவுத்ரி திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டுவிட்டு பொறுப்புள்ள மனைவியாக மட்டும் இருக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரது தோழி பிரியங்கா சவுத்ரிக்கும் ஏப்ரல் 1ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாளை அவர்களின் திருமணம் டெல்லியில் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள் தவிர பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் மோடி, அகிலேஷ் கலந்து கொள்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கணவன், மனைவியாகப் போகும் ரெய்னா, பிரியங்கா பற்றிய விவரம் வருமாறு,

ரெய்னா
காஷ்மீர் மாநில புரோகித குடும்பத்தைச் சேர்ந்த ரெய்னாவின் குடும்பத்தார் 1980களில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் குடியேறியுள்ளனர். பிரியங்கா சவுத்ரியின் குடும்பம் உத்தர பிரதேச மாநிலம் பராத்தைச் சேர்ந்தது. தற்போது அவர்கள் மீரட்டில் வசித்து வருகிறார்கள்.

பிரியங்கா
ரெய்னா அம்மாவின் நெருங்கிய தோழியின் மகள் பிரியங்கா. ரெய்னாவின் தந்தையும், பிரியங்காவின் தந்தையும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர். பிரியங்கா காசியாபாத்தில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்துள்ளார்.

வேலை
பிரியங்காவுக்கு அபிஷேக் சவுத்ரி, விவேக் சவுத்ரி என்று 2 சகோதரர்கள் உள்ளனர். அபிஷேக் சென்னையிலும், விவேக் நொய்டாவிலும் சாப்ட்வேர் என்ஜினியர்களாக உள்ளனர். முதலில் பெங்களூரில் வேலை பார்த்த பிரியங்கா தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார்.

மனைவி
திருமணத்திற்காக விடுப்பு எடுத்து இந்தியா வந்துள்ளார் பிரியங்கா. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு அவர் வேலையை விடக்கூடும் என்று கூறப்படுகிறது. பிரியங்கா பெங்களூரில் வேலை பார்த்தபோது தான் அவருக்கும், ரெய்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications