டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டம்!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 100க்கும மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியி தமிழக விவசாயிகள் இன்று 21வது நாளை எட்டியுள்ளது.

Protest starts in Puducherry for supporting Tamilnadu farmers delhi protest

அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி பேருந்து நிலையம் சுதேசி மில் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+