நாடு முழுவதும் வங்கிகளில் ரூ 8.11 லட்சம் கோடி டெபாசிட்: ரிசர்வ் வங்கி
நாடு முழுவதும் வங்கிகளில் ரூ 8.11 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை: நாடு முழுவதும் நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக நவம்பர் 8 ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பழைய நோட்டுகளை டிசம்பர் 30 ம் தேதிக்குள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் வங்கிகளில் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை செபாசிட் செய்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட மூன்று வாரமாகியும் இன்னும் சில்லறைத் தட்டுப்பாடு தீரவில்லை. இதனால் வங்கிகளின் வாசல்களில் பெரிய வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் திங்கள்கிழமை வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்துள்ளனர்.
அதேபோல், ரூ.2.16 லட்சம் கோடி பணம் வங்கிக் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.33,948 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுளை மாற்றம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications