மாநில உரிமை ரேஸில் முந்தும் பஞ்சாப்- டிஜிபி நியமன முறைக்கு எதிராக சட்டசபையில் அதிரடி தீர்மானம்!
பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டசபையில் மாநில காவல்துறை தலைவர் டிஜிபி நியனம முறையை மாற்றக் கூடிய அதிரடி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுவாக மாநிலங்களில் டிஜிபி நியமனம் என்பது மாநில அரசால் மேற்கொள்ளப்படுவது அல்ல. டிஜிபி பதவிக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் மாநில அரசால், யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் Union Public Service Commission-க்கு அனுப்பி வைக்கப்படும். அந்த 3 பேரில் ஒருவரை மத்திய அரசின் Union Public Service Commission, மாநில டிஜிபியாக நியமிக்கும். இதன் மூலம் மத்திய அரசு, மாநில காவல்துறையில் தமக்கு இருக்கும் அதிகாரத்தை வெளிப்படுத்தும்.

தமிழ்நாட்டில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு பதவி காலம் ஜூன் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த டிஜிபி யார் என்பதை மத்திய அரசு பணி தேர்வாணையம் Union Public Service Commission முடிவு செய்து அறிவிக்கும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் புதிய டிஜிபி அறிவிக்கப்படுவார்.
இத்தகைய நடைமுறைக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு குரல் கொடுத்துள்ளது. இந்த நடைமுறையை மாற்றவும் புதிய நடைமுறையை உருவாக்கவும் வலியுறுத்தி பஞ்சாப் சட்டசபையில் நேற்று அதிரடியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அத்தீர்மானத்தில், மாநில அரசு நியமிக்கும் குழுவு, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். மாநில அரசே புதிய டிஜிபி யார் என்பதை தீர்மானித்து அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அமைக்கும் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை வகிப்பார். மொத்தம் 7 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தின் மூலம் மாநில டிஜிபிகள் நியமனத்தில் மத்திய அரசின் தலையீட்டை தவிர்க்க முடியும் என்பது பஞ்சாப் அரசின் நிலைப்பாடு.
மாநில உரிமைகள் விவகாரத்தில் முந்தும் பஞ்சாப்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications