Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி கொடும்பாவியை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை தீ வைத்து எரிப்பர்.

Punjab Farmers burn effigies of PM Modi, Ambai, Adani

இந்த ஆண்டு பஞ்சாப்பில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்கு பதிலாக பாரதீய கிஸான் யூனியன் (Ugrahan) விவசாயிகள் அமைப்பு நூதன முறையை கடைபிடித்தனர். மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பல அடி உயர கொடும்பாவியை தயார் செய்தனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களால் தொழிலதிபர்கள் அதானி, அம்பானிதான் பயனடைகின்றனர் என்பதை குறிக்கும் வகையில் அவர்களது படங்களும் இந்த கொடும்பாவில் சேர்க்கப்பட்டன. பின்னர் தசாரா பண்டிகை நிகழ்ச்சியில் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகள் ஒருசேர கொளுத்தப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் இதேபோல் கொடும்பாவிகளை விவசாயிகள் கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+