கேதார்நாத்துக்கு நடந்து போனது ஏன்?... ராகுல் தரும் உருக்கமான விளக்கம்!
கேதார்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013ம் ஆண்டு பயங்கர வெள்ளத்தில் சிக்கி மடிந்து போன மக்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலுமே தான் நடந்து போனதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஓய்விலிருந்து திரும்பி வந்து டெல்லியைக் கலக்கிய ராகுல் காந்தி திடீரென நேற்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் கேதார்நாத் கோவிலில் சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தி பூஜை செய்தார்.

கோவிலுக்கு அவர் நடந்து வந்து தரிசனம் செய்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், நான் கடவுளிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. நான் கோவிலுக்கு நடந்து வந்தது பெரிய விஷயம் இல்லை.
கடந்த 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களை நினைவு கூறும் வகையிலேயே நடந்து வந்தேன் என்றார் ராகுல் காந்தி.
இன்று காலை எட்டரை மணிக்கு கோவிலுக்கு வந்த ராகுல் காந்தி அங்கு சிவலிங்கத்தை தரிசித்து வணங்கி வழிபட்டார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications