குவெட்டா... இந்த ஆண்டு இதுவரை 38 தாக்குதல்கள்... 227 பேர் பலி!
டெல்லி: பலுசிஸ்தானின் குவெட்டா நகரம் கொதி நிலையில் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 28 தீவிரவாதத் தாக்குதல்களை குவெட்டா கண்டுள்ளது. நேற்று நடந்த உக்கிரமான தாக்குதலில் 57 போலீஸார் கொல்லப்பட்டனர்.
2016ம் ஆண்டில் இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு குவெட்டாவின் பல பகுதிகளில் மொத்தமாக 38 தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 330 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

நேற்று குவெட்டாவில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த தாக்குதலில் 57 இளம் போலீஸார் கொல்ல்பபட்டனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
நேற்று நடந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பு காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கல்லூரி தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2006 மற்றும் 2008 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தக் கல்லூரி தாக்குதலுக்குள்ளானது.
2006ம் ஆண்டு நடந்த தாக்குதலின்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 6 போலீஸார் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலின்போது கல்லூரிக்குள் 6 குண்டுகள் வெடித்தன. அந்தப் பகுதியே அதிர்ந்து.
2008ம் ஆண்டு நடந்த தாக்குதலின்போது ராக்கெட் வீசி்யும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் தாக்கினர். அதில் ஒருவர் மட்டும் காயமடைந்தார். உயிரிழப்பு ஏதும் இல்லை. அதே நாளில் குவெட்டா ரயில் நிலையத்திலும் குண்டுவெடித்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குவெட்டாவில் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வக்கீல் ஒருவருக்கு அஞ்சலி செலுத்த பெரும் திரளான வக்கீல்கள் சென்றிருந்த சமயத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும், ஜமாத் உல் அஹ்ரார் என்ற அமைப்பும் சேர்ந்து பொறுப்பேற்பதாக அறிவித்தன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications