ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு!
அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி ஹதிராஷ் ஹெச்.வர்மா (Hadirash H. Varma), மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் மோடி பெயர் குறித்து விமர்சித்தார் என்பது அவதூறு வழக்கு. இந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.

இந்த 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதே புகாருடன் ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் எம்பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற்த்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். ராகுல் காந்தி மனுவை ஜார்க்கண்ட் சிறபு நீதிமன்றம் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் முடிவில், விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு தர முடியாது என திட்டவட்டமாக கூறியது ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றம்.
இந்த பின்னணியில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி ஹதிராஷ் ஹெச்.வர்மா தற்போது ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக நியமிக்கபப்ட்டுள்ளார். ராகுல் காந்திக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்த நிலையில் நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது புதிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications