அன்று கையில் தவழ்ந்த சிசு.. இன்று பாலகனாகி கையை பிடித்த தருணம்.. ராகுலை சந்தித்த ராஜம்மா நெகிழ்ச்சி
வயநாடு: ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என சாட்சி கூறிய செவிலியர் ராஜம்மாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003-ஆம் ஆண்டு இயக்குநராகவும் செயலாளராகவும் இருந்து வருகிறார் என குறிப்பிட்டிருந்தார்.
அது தொடர்பான ஆவணங்கள் ராகுல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் ஜூன் 19-ஆம் தேதி 1970-இல் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜம்மா, ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்றும் அதற்கு நான் சாட்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சோனியா காந்தி
கேரள மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்ரி பகுதியைச் சேர்நதவர் ராஜம்மா (72). இவர் டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு சோனியா காந்தி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ்
கடந்த 1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பிறந்த ராகுல் காந்தியை கையில் ஏந்தினேன் என ராஜம்மா தெரிவித்திருந்தார். இதனால் ராகுல் இந்தியாவில் பிறந்ததற்கு நானே சாட்சி என தெரிவித்திருந்தார். மேலும் 49 வயதாகும் கியூட் பேபி காங்கிரஸ் தலைவராகவும் வயநாட்டில் போட்டியிடுவதையும் நினைத்து மகிழ்கிறேன்.
|
3 நாள் பயணம்
ராகுல் காந்தி வயநாட்டுக்கு அடுத்த முறை வரும் போது நான் அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன் என தெரிவத்திருந்தார். இந்த நிலையில் வயநாடு எம்பியான ராகுல் காந்தி அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 3 நாள் பயணமாக சென்றுள்ளார்.

ராஜம்மாவை சந்தித்த ராகுல்
அவர் இன்றைய தினம் செவிலியர் ராஜம்மா சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். தான் பார்க்கும் போது குழந்தையாக இருந்த ராகுல் தற்போது பாலகனாகி தன் கைகளை பிடித்த போது ராஜம்மாவுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications