பிரதமர் மோடி ஏழைகளை கண்டு கொள்வதில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அமேதி: பிரதமர் மோடி ஏழைகளை கண்டுகொள்வதில்லை என்றும் அவரது வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அவரது மக்களவை தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு நியாயா பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அங்குள்ளவர்கள் மிகுந்த புத்திசாலிகள். அவரது பயணத்தால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை. சராசரி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு பா.ஜ.க. கூட்டணி அரசின் தவறான நிர்வாகம்தான் காரணம். பிரதமர் மோடி ஏழைகளை கண்டு கொள்வதில்லை இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.
பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது இந்து முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக மோடி பேசினார். பீகார் தேர்தல் முடிவுக்குப்பின், அந்த மாநிலம் இருப்பதையே அவர் மறந்து விட்டார். நல்ல நாட்கள் பிரதமர் மோடிக்கு தான் வந்துள்ளதே தவிர நாட்டு மக்களுக்கு வரவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications