ராகுல்ஜி... நாடாளுமன்றத்தில் ஒரு மணிநேரமாவது பேசனும்...... சொல்வது பிரித்விராஜ் சவாண்
மும்பை: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறைந்ததது 1 மணிநேரமாவது உரையாற்றும் அளவுக்கு தம்மை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவாண் அறிவுரை கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளதாவது:

பெருந்திரளான மக்களை ஈர்க்கும் வகையிலான பாடி லாங்குவேஜ் என்பது ராகுல் காந்திக்கு மிகவும் அவசியம். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் 2 சபைகளும் நேரடி ஒளிபரப்பை செய்கின்றன.
இதனால் அனைத்து மக்களும் பார்க்கின்றன. அப்போது நீங்கள் ஒருவரியில் கேள்வி கேட்டு உட்கார்ந்துவிட்டால் மக்களிடம் எப்படி ஈர்ப்பு வரும்? குறைந்தது 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை தொடர்ந்து பேச வேண்டும்.
நீங்கள் பதவியில் இல்லாத போது மிஸ்டர் பிரதமர் ... இதை செய்யுங்கள் என்று ஒற்றை வரியில் கூறி மக்கள் பிரச்சனையை முன்வைக்கக் கூடாது.. மக்களுக்கு நமக்கான தலைவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு சவாண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications