ராகுல் நடத்திய சர்வேயிலும் படுதோல்வி! காங்.க்கு 85 முதல் 92 இடங்கள்தான் கிடைக்குமாம்!!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமது கட்சியினரைக் கொண்டு நாடு முழுவதும் நடத்திய கருத்து கணிப்பிலும் காங்கிரஸ் படுதோல்வியைத்தான் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் நாளை தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே தொண்டர்களை ஆறுதல்படுத்தும் வகையிலான உரை ஒன்றை ராகுல் தரப்பு தீவிரமாக தயாரித்துக் கொண்டிருக்கிறதாம்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.
இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட ஒரு முறையில் கருத்து கணிப்பு ஒன்றை நட்டத்தியுள்ளார்.

1500 தொண்டர்கள்
இக்கருத்து கணிப்பு 1500 காங்கிரஸ் தொண்டர் படையை வைத்து நாடு முழுவதும் நடத்தப்பட்டிருக்கிறது.

85 முதல் 92 இடம்தான்..
இதன் முடிவுகள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்குமாம். அதாவது 85 முதல் 92 இடங்கள்தான் காங்கிரஸுக்கு கிடைக்கும்.

பாஜகவுக்கு 225 -230
ராகுல் நடத்திய சர்வே முடிவில் பாரதிய ஜனதா அணிக்கு 225 முதல் 230 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

தோல்வியை ஒப்புக்கொள்கிறார்
இதனைத் தொடர்ந்து நாளை அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் போது தோல்வியை ஏற்றுக் கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ராகுல் பேச இருக்கிறாராம்.

ஆறுதல் அறிக்கை தயாரிப்பு
இதற்காக தொண்டர்களை ஆறுதல்படுத்தக் கூடிய வகையிலான வாசகங்களுடன் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறதாம். இந்த அறிக்கையை ராஜிவ் காந்தி கல்வியியல் நிறுவனத்தின் இயக்குநர் மோகன் கோபால், சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்து வருகின்றனராம்.

யுத்தம் தொடர்கிறது
இந்த அறிக்கையில், போர்க்களத்தைத்தான் நாம் இழந்திருக்கிறோம்..யுத்தம் இன்னும் தொடர்கிறது என்பது போன்ற டச்சிங்கான வசனங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications