குஜராத்தில் காங்கிரஸுக்கு கை கொடுத்த 'ராகுல் காந்தி'யின் கோவில் விஜயம்!
குஜராத்தில் ராகுல் காந்தி கையிலெத்த கோவில் விஜயம் வியூகம் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
அகமதாபாத்: குஜராத்தில் ராகுல் காந்தி தடாலடியாக கையில் எடுத்த கோவில்கள் விஜயமானது காங்கிரஸுக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. ராகுல் காந்தி வழிபாடு செய்த கோவில்கள் இருக்கும் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.
குஜராத்தில் பாஜகவும் பிரதமர் மோடியும் இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் விதமாக தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ராகுல் காந்தி திடீரென குஜராத்தின் முக்கிய கோவில்களுக்கு போய் வழிபாடு நடத்தினார்.
இதுவும் கூட தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்பட்டது. தமது குடும்பமே சிவபக்தர்கள்தான் என ராகுல் காந்தி பதிலடி கொடுத்திருந்தார்.

ஜகந்நாதர் ஆலயம்
துவாரகையில் செப்டம்பர் 25-ந் தேதி பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி அகமதாபாத்தின் ஜகந்நாதர் ஆலயம் அமைந்திருக்கும் ஜமல்பூர் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். ராகுல் காந்தி தமது பிரசாரத்தில் 27 கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

ஜமால்பூர் தொகுதி
இந்த 27 கோவில்கள் அமைந்திருக்கும் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் இப்போது வென்றுள்ளது. துவாரகை பாஜகவின் கோட்டை. அத்தொகுதி தற்போதும் பாஜக வசமே உள்ளது., ஆனால் ஜமால்பூர் தொகுதியை பாஜகவிடம் இருந்து தட்டிப் பறித்தது காங்கிரஸ். இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

காத்டா தொகுதி
அக்ஷர்தாம் கோவில் இருக்கும் காந்திநகர் வடக்கு தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது. மற்றொரு கோவில் நகரமான காத்டாவில் காங்கிரஸ் வேட்பாளர் பர்வீன் மாரு அமைச்சராக இருந்த அத்மரம் பார்மரை 9,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அல்பேஷ் தாகுர்
இதேபோல் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பாஜகவின் நரேன் படேலை காங்கிரஸின் ஆஷாபென் படேல் உன்ஜாவில் வீழ்த்தினார். இங்குதான் பட்டேல்களின் புனித தலம் இருக்கிறது. கோடியார் ஆலயம் இருக்கும் ரதன்பூரில் காங்கிரஸ் வேட்பாளரான அல்பேஷ் தாகுர் தாகூர் அமோக வெற்றி பெற்றார். ராகுல் காந்தி கோவில் வழிபாடு நடத்தியதில் 18 தொகுதிகள் காங்கிரஸ் வசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது,
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications