For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் ரயில்வே மேம்பாலம் இடிந்து சரக்கு ரயில் மீது விழுந்து விபத்து: 7 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் ரயில்வே மேம்பாலம் ஒன்று இடிந்து சரக்கு ரயில் மீது விழுந்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள முபசாபர்பூர் நகரில் ரயில் நிலைய சந்திப்பு உள்ளது. இங்குள்ள மேம்பாலத்தில் இன்று பயணிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யாரும் எதிர்பாராவிதமாக மேம்பாலம் திடீர் என்று இடிந்து விழுந்தது.

பாலத்தில் இருந்து இடிந்த பகுதி தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

English summary
Railway bridge collapsed in Muzaffarpur in Bihar on wednesday injruing 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X