வெடித்தது பூகம்பம்! மேற்கு வங்க ஆளுநர் மீது ராஜ் பவன் பெண் ஊழியர் பாலியல் புகார்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஒருவர் மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1977 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவி ஆனந்த போஸ், மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். ஆனந்த போஸ் கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றி வருகிறார்.

Raj Bhavan staff accuses West Bengal Governor of molestation

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக, கொல்கத்தா ராஜ் பவனில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான பெண் ஒருவர் கொல்கத்தா ஹரே ஸ்ட்ரீட் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளரான பெண் ஒருவர், ஆளுநர் மாளிகையின் உள்ளே அமைந்துள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரியை அணுகி, ஆளுநர் ஆனந்த போஸ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, அதிகாரி உடனடியாக ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்க, ஹரே ஸ்ட்ரீட் போலீசார் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அந்தப் பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு நிரந்தர வேலை வழங்குவதாகக் கூறி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மேற்கு வங்க மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் வரவில்லை.

இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் இன்று இரவு தங்க இருக்கிறார். இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+