பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கும்பல்.. பதறிய கிராம மக்கள்.. ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு
ராஜஸ்தானில் பூசாரியை உயிரோடு எரித்து கொன்ற கயவர்கள்
ஜெய்ப்பூர்: ஒரு கோயில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறி பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் வடமாநிலங்களின் வன்முறைகள் பெருகி வருகிறது.. அராஜகக்காரர்களின் அட்டகாசத்தையும் யாராலும் அடக்க முடியவில்லை.. குறிப்பாக கிராம பகுதிகளில், படிப்பறிவில்லாத காரணத்தினாலும்,

மூடநம்பிக்கைகளில் மூழ்கி திளைத்து விட்டதாலும் பெருமளவு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.. குறிப்பாக பெண் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. இதில் டாப் லிஸ்ட்டில் உள்ளது உத்தரபிரதேசம்தான்.. இதற்கு அடுத்து ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உள்ளன.
இப்போதும் ராஜஸ்தானில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. கரோலி மாவட்டத்தில் புக்னா என்ற கிராமம் உள்ளது.. இங்குள்ள ராதாகிருஷ்ணன் கோயிலில் பூசாரியாக இருந்தவர் பாபு லால் வைஷ்னவ்.. 55 வயதாகிறது.. இவர் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் வந்திருக்கிறார்.. அதனால், அந்த பகுதியிலேயே ஒரு சிறிய வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.. மேலும், ஒரு வீடு கட்டவும் முயற்சி செய்து வந்திருக்கிறார்.
இந்த விஷயத்தை அறிந்த அதே பகுதியை சேர்ந்த உயர்ஜாதி வகுப்பினர் சிலர், வீடு கட்டும் இடம் தங்களுக்கு சொந்தமானது என்று சொல்லி பூசாரியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.. ஆனாலும், பூசாரிக்கு ஆதரவாக அந்த பகுதி மக்கள் இருந்து வந்தனர்.. ஒருகட்டத்தில் உயர்ஜாதியினர் தொடர்ந்து தகராறு செய்யவும், இந்த விஷயம் ஊர் பெரியவர்களிடம் சொல்லப்பட்டது... பிரச்சனையை கேட்ட அவர்களும், பூசாரி பக்கமே ஆதரவாக நின்றனர்,
இதனால் தரகாறு செய்த உயர்ஜாதியினர் ஆத்திரம் அடைந்து, பூசாரி வீடு கட்டும் இடத்திலேயே, ஒரு குடிசையை அமைத்து அந்த இடம் தங்களுடையதுதான் என்று ஆக்கிரமிப்பு செய்தனர்.. மேலும், பூசாரியின் விளைநிலத்தை தீயிட்டு எரித்தனர்.. கண்போல வளர்த்த பயிர்கள் எல்லாம் பற்றி கொண்டு எரிவதை பார்த்த பூசாரி பதறிடியத்து கொண்டு ஓடிவந்தார்.. உடனே, அந்த நபர்கள் பூசாரி மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டனர்.
உடம்பெல்லாம் தீ பரவியதால், பூசாரி கதறி துடித்தார்.. அவரது சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து, அவரை மீட்டு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர்.. எவ்வளவோ முயற்சி செய்தும், பூசாரியை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.. இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. மேலும் உயிரிழந்த பூசாரி குடும்பத்துக்கு நஷ்ட ஈடும் அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, உயிருக்கு ஆஸ்பத்திரியில் போராடி கொண்டிருந்தபோது, பூசாரி மரண வாக்குமூலம் ஒன்றை அளித்திருந்தார்.. அதனடிப்படையில் கைல்சா மீனா என்பவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்டவர்களை தேடியும் வருகின்றனர்.
இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது... எப்படி ஹத்ராஸ் சம்பவத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து அரசியலாக்கியதோ, அதுபோலவே, பாஜகவும், காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் விவகாரத்தை கூட்டி உள்ளது.. இதனால் பாஜக - காங்கிரஸின் அரசியல் மோதலும் அதிகமாகி வருகிறது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications