கொடுமை! பள்ளி மாடியிலிருந்து குதித்த 4ம் வகுப்பு சிறுமி.. துடிதுடித்து மரணம்! ஆதாரத்தை அழித்த பள்ளி?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியின் 4வது மாடியில் இருந்து 9 வயதுக் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. அந்தக் குழந்தை நான்காவது மாடியில் இருந்து குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தக் காலத்தில் குழந்தைகள் நொடிகளில் எடுக்கக்கூடாத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் உயிருக்கே கூட ஆபத்து நடந்துவிடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் பள்ளி
ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது அமய்ரா என்ற சிறுமி, பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று நவம்பர் 1ஆம் தேதி நடந்துள்ளது. அங்குள்ள மன்சரோவர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் பிற்பகல் 1:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுமார் 10 வினாடிகள் ஓடும் சிசிடிவி காட்சிகளில், அமய்ரா முதலில் தடுப்புச்சுவர் மீது ஏறுகிறார். ஓரிரு நொடிகள் அங்கு அமர்ந்திருக்கும் சிறுமி பிறகு கீழே குதிப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. கீழே சில செடிகள் இருந்த நிலையில், அதில் சிறுமி விழுந்திருக்கிறார். அவரது தலை அங்குள்ள சுவரில் மோதியுள்ளது.
மருத்துவர்கள்
இதையடுத்து பள்ளியில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், "அந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, சுவாசம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. குழந்தையின் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது" என்றார்.
அக்குழந்தை சுமார் 47 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளது.. அதில் குழந்தையின் விலா எலும்புகள் உடைந்து உள் உறுப்புகளைத் தாக்கியதால், உடல் முழுவதும் காற்று நிரம்பி வீங்கியிருந்தது. தலையில் மிக மோசமான காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கும் இருந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இது குறித்து எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
ஆதாரம் அழிப்பு?
குழந்தை குதித்தாக தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும், ரத்தக் கறை உட்பட எந்தவொரு ஆதாரமும் அங்கு இல்லை.. பள்ளி நிர்வாகம் ஆதாரங்களை அழித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குழந்தை விழுந்த இடத்தில் இருந்த ரத்தக் கறைகளைப் பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் ஆதாரங்களைப் பாதுகாப்பது சட்டப்படி அவசியம்.. இருப்பினும், பள்ள நிர்வாகம் அவற்றை அழித்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர்..
புகார்
இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்படி பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்குழந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தை குற்றச்சாட்டு
இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது குழந்தையின் தந்தை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சம்பவ இடத்தையும் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது குழந்தை பள்ளிக்குச் சென்றபோது நார்மலாகவே இருந்தார். திடீரென ஏன் இப்படிச் செய்தார் எனப் புரியவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்குக் கூட எங்களை அனுமதிக்கவில்லை" என்றார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications