ராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள்
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் உரிமையாளரை கடித்து கொன்ற ஒட்டகத்தை, அந்த கிராமவாசிகள் அடித்தே கொன்றுள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் உரிமையாளரை கடித்து கொன்ற ஒட்டகத்தை, அந்த கிராமவாசிகள் அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டகத்திற்கு கோபம் வந்துவிட்டால் தன்னை வளர்த்தவர் என்று கூட பார்க்காது, யாராக இருந்தாலும் தாக்கிவிடும் என்று ஒட்டகம் வளர்ப்பவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தான் ஒட்டகம், அதன் உரிமையாளரை கடுமையாக தாக்கி கொன்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே பஞ்சு ஊரில் ஒருவர் தனது ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு ஒட்டகம் அவரின் தலையை கடித்து இழுத்து தூக்கி போட்டிருக்கிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். உரிமையாளரைக் கொன்ற ஒட்டகம் தொடர்பான தகவல் அந்தப் பகுதியில் தீயாய் பரவியது.

உரிமையாளர் பலி
சம்பவ இடத்துக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வந்துள்ளனர். ஓனரை கடித்த ஒட்டகத்தை மட்டும் தனியே ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். அதேநேரம் உடனடியாக ஒட்டகத்திடம் கடிபட்ட ஓனரை சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் உறவினர்களுக்கு ஆத்திரம் தாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது
ஒட்டகத்தால் கொல்லப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அந்த ஒட்டகத்தை கட்டையால் அடித்து அதன் தலையை சிதைத்து கொன்றுள்ளார்கள், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக பன்சு காவல் நிலைய மனோஜ் யாதவ் கூறும் போது, "ஒட்டகத்தை கிராமத்தில் சிலர் மேய்த்து கொண்டிருந்தனர். ஒரு ஒட்டகம் கயிறை அறுத்துக்கொண்டு தறிகெட்டு ஓடியிருக்கிறது. சோகன்ராம் நாயக் என்பவரது ஒட்டம் என்பது தெரியவந்திருக்கிறது.

ஏற்கனவே மரணம்
சோகன்ராம் ஒட்டகத்தை கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார். அப்போது ஆத்திரம் அடைந்த ஒட்டகம் அவரை கடித்துக்குதறி தூக்கி எறிந்துள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அவரது உறவினர்கள் விரைந்து வந்து சோகன்ராமை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த ஆத்திரத்தில் ஒட்டகத்தை கட்டிவைத்து அடித்து கொன்றுள்ளார்கள்" என்றார்.

புகார் வரவில்லை
ஒட்டகத்தை கொன்றது தொடர்பாக கிராம வாசிகளிடம் கேட்கப்பட்டபோது," ஒட்டகத்துக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் தான் யார் என்றே தெரியாமல் அது தாக்கத் தொடங்கும். அதன் காரணமாகதான் அதன் உரிமையாளரைக் கொன்றது. அதை அப்படியே விட்டால் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதைக் கொன்றோம்" என்றிருக்கிறார். இதனிடையே ராஜஸ்தானின் மாநில விலங்கான ஒட்டகம் கொல்லப்பட்டது குறித்து காவல்நிலையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் போலீசார் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்தவரின் உடல் உடற் கூறு ஆய்விற்கு பின் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications