Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்ட நெருங்க முடியாது! ராஜஸ்தானில் மீண்டும் மலரும் தாமரை! காங்கிரசுக்கு ஷாக் அளித்த கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2018 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று அசோக் கெலாட் முதல்வராக உள்ளார்.

Rajasthan Assembly Election 2023: BJP May won with full majority, says Ground Zero Research Survey

தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் பல பிரச்சனைகள் வெடித்தன. அதாவது முதல்வர் பதவி விஷயத்தில் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே பெரிய யுத்தமே நடந்தது. இதனால் பாதியில் ஆட்சி கலையும் எனவும் கணிக்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சி திறமையாக செயல்பட்டு பிரச்சனையை சரிசெய்துள்ளன. இருப்பினும் தற்போது அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே மனக்கசப்பு இருந்தாலும் தற்போதைய சூழலில் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ், பாஜகவினர் இப்போதே தொடங்கி விட்டனர்.

ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி ஜெமரிட்டியுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் Ground Zero Research எனும் அமைப்பு சார்பில் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கருத்து கணிப்பு என்பது அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 4ம் தேதி வரை ஒரு மாதம் நடந்தது. மொத்தம் 100 தொகுதிகளை சேர்ந்த அனைத்து சாதி, மதங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி ராஜஸ்தானில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 200 தொகுதிகளில் பாஜக 43.58 சதவீத ஓட்டுக்கள் பெற்று 118 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அரியணை ஏறுவது உறுதியாகும்.

மாறாக தற்போது மாநிலத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி 40.53 சதவீத ஓட்டுக்கள் பெற்று 76 இடங்கள் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக ‛க்ரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ்' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர
மற்றவர்கள் 15.89 சதவீத ஓட்டுக்களுடன் 6 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த கருத்து கணிப்பில் இன்னொரு விஷயம் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய கருத்து கணிப்பு என்பது அனைவரையும் நேரில் சந்தித்து எடுக்கப்பட்டதாகும். அதோடு இது தற்போதைய சூழலில் மக்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் நபர்களின் கட்சி மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை பொறுத்து இந்த கருத்து கணிப்பு முடிவு என்பது தேர்தல் ரிசல்ட்டில் மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+