5 ஆண்டு.. பாஜக வேட்பாளரின் குபீர் வளர்ச்சி! ரூ.8.8 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்ந்த சொத்துக்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு 8.8 கோடியில் இருந்து ரூ,100 கோடியை தாண்டி உள்ளது.
ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 20க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பிரச்சார பணிகள் தீவிரமடைந்து இருக்கின்றன.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டு உள்ள சொத்து மதிப்பு விபரங்கள் போன்றவை தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ராக்கெட் வேகத்தில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு உயர்ந்து இருப்பது பலரை மலைக்க வைத்து இருக்கிறது. பாஜக சார்பில் பிகானெர் கிழக்கு தொகுதியில் போட்டியிடுபவர் சித்தி குமாரி.
5 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு 11 மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஆம், 2018 சட்டசபைத் தேர்தலில் ரூ.8.89 கோடி சொத்து மதிப்பு வைத்து இருப்பதாக சித்தி குமாரி கணக்கு காட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடியை தொட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அவர் குடும்ப பின்னணிதான். இவர் பிகானெர் ராஜ குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஆவார். சித்தி குமாரியின் பாட்டி சுசிலா குமாரி கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது சொத்துக்கள் பேத்தியான சித்தி குமாரிக்கு கை மாறியது.
இதன் மூலம், சித்தி குமாரின் அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.85.78 கோடியாக அதிகரித்து உள்ளது. அதேபோல் அவரது அசையும் சொத்துக்கள் ரூ.3.67 கோடியில் இருந்து ரூ.16.52 கோடியாக உயர்ந்து உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜேவின் சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது. அவரது நகை மற்றும் பணம் கையிருப்பு அதிகரித்து உள்ளது. ரூ.1.08 கோடியாக இருந்த அவரது நகை மதிப்பு தற்போது ரூ.2.40 கோடியாக அதிகரித்து இருக்கிறது. அதேபோல், பணம் கையிருப்பு ரூ.1.29 லட்சத்தில் இருந்து ரூ.2.05 லட்சமாகவும், வங்கி சேமிப்பு ரூ.51.24 லட்சத்தில் இருந்து ரூ.58.74 லட்சமாக அதிகரித்து உள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications