For Daily Alerts
Just In
ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா – பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
டெல்லி: ராஜஸ்தான் மாநில ஆளுநர் மார்கரெட் ஆல்வா இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
"இது வெறும் மரியாதை நிமித்த சந்திப்புதான்" என்று பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன. மோடியை அவரது இல்லத்தில் ஆல்வா சந்தித்தமை தொடர்பான வேறு தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தற்போது ராஜினாமா செய்ய கோரப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, உத்தரபிரதேச மாநில கவர்னர் பி.எல். ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மார்கரெட் ஆல்வா, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Rajasthan governor Margaret Alva called on Prime Minister Narendra Modi on Tuesday amid reports that a number of governors appointed by the previous UPA government may be asked to quit.