ராஜஸ்தான் காங். ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசம்: நரேந்திர மோடி
ஆல்வர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசம் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி இன்று அங்கு பல இடங்களில் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஆல்வர் என்ற இடத்தில் இன்று பகல் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் உங்கள் எம்.எல்.ஏவை தேர்ந்தெடுப்பதற்கானது மட்டுமின்றி.. ராஜஸ்தானின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியதும்கூட..

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் இரவும் பகலுமாக குஜராத்தை பற்றியே பேசுகிறார். அவர் எங்கு போய் பேசினாலும் குஜராத் மாநிலத்தைப் பற்றியே பேசுகிறார். சட்டசபை தேர்தல் என்பது குஜராத்துக்கா நடைபெறுகிறது? ராஜஸ்தான் மாநிலத்துக்குத்தான் தேர்தல் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார் கெலாட்.
அதிக அளவிலான அமைச்சர்கள் சிறையில் இருக்கின்ற பெருமை கூட இந்த ராஜஸ்தான் மாநில அரசுக்குத்தான் உண்டு. இந்த மாநிலத்துக்குரிய நிதி அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் கூட இந்த அரசு நீடிக்கத்தான் வேண்டுமா?
காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களின் குரலை கோரிக்கைகளை கேட்டதே இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் பழங்குடி இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடைபெறுகிறது.
இந்த மாநில அரசால் ராஜஸ்தான் மக்களுக்கு தூய குடிநீர் கூட வழங்க முடியவில்லை.. இப்படிப்பட்ட இந்த மாநில அரசை அகற்ற வேண்டியது மக்களின் கடமை.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications