ஓரம் கட்டப்பட்ட வசுந்தரராஜே சிந்தியா.. மோடியுடன் முதல் முறையாக ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஒதுக்கி வைக்கப்பட்ட பாஜகவின் மூத்த தலைவர் வசுந்தர ராஜே சிந்தியா நேற்று முதல் முறையாக பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அதிருப்தி அலை இருக்கிறது; இதனால் ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசோ, ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.
ராஜஸ்தானில் பாஜகவின் முகமாக இருப்பவர் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா. ஆனால் தேர்தலுக்கு முன்பிருந்தே வசுந்தர ராஜே சிந்தியாவை பாஜக ஓரம் கட்டி வைத்துவிட்டது. வசுந்த ராஜேவின் ஆதரவாளர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிடவும் சீட் கொடுக்கப்படவில்லை. வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணிக்கப்படுவதால் பாஜக மீது அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். மேலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருந்தும் வசுந்தர ராஜே சிந்தியா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாலக்நாத், ராஜேந்திர ரத்தோர், சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி என பலரையும் முன்னிறுத்தவும் பாஜக முனைப்பு காட்டியது.
ஆனால் தேர்தல் களம் பாஜகவுக்கு சவாலானதாக இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டின. வசுந்தரராஜே சிந்தியாவை ஓரம் கட்டுவதால் பாஜகவுக்குதான் இழப்பு எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இப்போது வசுந்த ராஜே சிந்தியாவுக்கு பாஜக முக்கியத்துவம் தருகிறது. ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் வசுந்தர ராஜே சிந்தியா பங்கேற்றார். பிரதமர் மோடியின் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் முதல் முறையாக வசுந்த ராஜே சிந்தியா நேற்றுதான் பங்கேற்று பிரசாரம் செய்தார். இது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இருந்தாலும் சிந்தாமல் சிதறாமல் வசுந்தர ராஜே சிந்தியா ஆதரவாளர்கள் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்குமா? என்கிற சந்தேகத்தையும் அரசிய்ல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications