ஹோட்டலுக்கு பின்னாடி உஷ் உஷ்! போய் பார்த்தால்.. கனவிலும் நினைத்துப் பார்க்காத காட்சி! ஷாக் வீடியோ!
ஜெய்ப்பூர்: பாம்பை கண்டால் படையே நடுங்கும் என ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் பாம்புகளே ஒரு படை போல் வந்தால் எப்படி இருக்கும். ராஜஸ்தானில் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பிரபலமான ஹோட்டல் ஒன்றின் தோட்டத்தில் ஒரு பாம்பு வந்த நிலையில் அதனை பிடிக்க முயன்ற போது அடுத்தடுத்து பாம்புகள் வந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 18 நாகப் பாம்புகள் அடுத்தடுத்து வந்து படம் எடுத்த நிலையில் தலை தெறிக்க ஓடி உள்ளனர் வாடிக்கையாளர்கள்.
வட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதிகளில் விஷ ஜந்துக்கள் வருவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மழை காரணமாக பாம்புகள், முதலைகள் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.
ராஜஸ்தானிலும் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஹோட்டலின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாம்பை பிடிக்க முயன்ற போது அடுத்தடுத்து 18 நாகப்பாம்புகள் வந்திருக்கிறது. உதய்பூர் மாவட்டம் சோமஸ்ராம் நகரத்தில் பிரபலமான ஹோட்டலில் பின்பகுதியில் தோட்டம் அமைந்திருக்கிறது.

அந்த தோட்டத்தில் பாம்பு இருப்பதைக் கண்ட ஊழியர்கள் ஒருவர் இது தொடர்பாக பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்கும் சமன் சிங் சவுகானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குப்பைகளை அகற்றிவிட்டு அங்கிருக்கும் ஒரு பாம்பை பிடிக்க அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் ஒரு பெரிய நாகப் பாம்புடன் 18 நாகப் பாம்புகள் அங்கு இருந்தது. ஒட்டுமொத்தமாக கூட்டத்தை பார்த்ததும் அனைத்து பாம்புகளும் படம் எடுத்து சீறி நின்றன.
एक साथ 18 कोबरा स्नेक को देखकर रोंगटे खड़े हो गए...स्नेक कैचर चमन सिंह ने सुरक्षित रेस्क्यू किया...#उदयपुर की होटल में मिला सांपों का झुंड.#Udaipur #snake #snakecatcher #resque #hotel_garden #kobra #कोबरा pic.twitter.com/bNPBW7dICX
— Kapil Shrimali (@KapilShrimali) July 21, 2025
இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தலை தெறிக்க ஓடினர். தொடர்ந்து சமன் சிங் சவுகானின் ஊழியர்கள் அந்த பாம்புகளை ஒவ்வொன்றாக பிடித்து வனப்பகுதியில் விட எடுத்துச் சென்றனர். பொதுவாக நாகப்பாம்புகள் ஒரே நேரத்தில் 10 முதல் 20 முட்டைகளை இடும். முட்டையிலிருந்து பாம்புகள் வெளிவந்ததும் சில குட்டி பாம்புகளை தாய் நாகம் தின்று விடுமாம். ஆனால் இங்கு பிடிக்கப்பட்ட தாய் பாம்பு குட்டிகளை சாப்பிடாமல் அனைத்து குட்டிகளையும் வளர்த்திருக்கிறது. சமீபத்தில் தான் அந்த பாம்புகள் முட்டையிலிருந்து வெளி வந்திருக்க வேண்டும். கொடிய விஷத்தை கொண்ட இந்த நாகப் பாம்புகள் முட்டையிலிருந்து வரும்போது வீரியமிக்க விஷத்தை கொண்டிருக்கும். தற்போது இந்த பாம்புகள் பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட இருக்கிறது என்றார்.
ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாம்புகள் இருந்தால் அவற்றை அடிக்காமல் அருகில் உள்ள தீயணைப்புத் துறையினர் அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications