ராஜஸ்தான் பாஜகவில் பூகம்பம்? வசுந்தர ராஜே வீட்டுக்கு படையெடுத்த எம்.எல்.ஏக்கள்- கதி கலங்குது டெல்லி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவி தமக்கு கிடைக்காவிட்டால் பாஜக டெல்லி மேலிடத்துக்கு எதிராக கலகம் எழுப்புவதற்கு முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வசுந்தர ராஜே சிந்தியாவை பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் சந்தித்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் டெல்லி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் யார் என்ற பிரச்சனை பாஜகவில் வெடித்தது. டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரையில் வசுந்தர ராஜே சிந்தியாவை முதல்வராக்க விரும்பவில்லை. டெல்லி மேலிடத்தின் கட்டளைக்கு இணங்காமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிற குவாலியர் மகாராணி வசுந்தர ராஜே சிந்தியா. அதனால்தான் அவரை ஓரம்கட்ட முடிவு செய்தனராம் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும். வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு பதில் சாமியார் பாலக்நாத்தை முதல்வராக்கவே டெல்லி விரும்புகிறதாம்.
ஆனால் டெல்லி மேலிடம் சட்டசபை தேர்தலின் போதும் தம்மை புறக்கணித்தது; தற்போது வெற்றி பெற்ற பின்னரும் புறக்கணிக்கிறது.. இதற்கு பழிவாங்காமல் விடப் போவதும் இல்லை- முதல்வர் பதவியை ஒருபோதும் விட்டுத் தரப் போவதும் இல்லை என்பதில் வசுந்தர ராஜே சிந்தியா திட்டவட்டமாக இருக்கிறாராம். ஏற்கனவே தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலரையும் 'கட்டுப்பாட்டில்' வைத்திருக்கிறார் வசுந்தர ராஜே சிந்தியா. சில எம்.எல்.ஏக்களை அவரது மகன் துஷ்யந்த் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைத்ததும் சர்ச்சையானது.
#WATCH | Rajasthan: Several BJP MLAs including former MLAs arrive at the residence of former Rajasthan CM and BJP leader Vasundhara Raje, in Jaipur pic.twitter.com/CJZ4RW1AXw
— ANI (@ANI) December 10, 2023
டிசம்பர் 3-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் முதல்வர் யார் என்பதை பாஜக முடிவு செய்யாமல் தத்தளிப்பது கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்திருக்கிறது. இதனால் முதல்வர் யார் என்பதை தீர்மானித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. இந்த நிலையில் திடீரென ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் இன்று வசுந்தர ராஜே சிந்தியா வீட்டுக்கு அடுத்தடுத்து படையெடுத்தனர். பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் வசுந்தர ராஜே சிந்தியா பக்கமே இருக்கின்றனர். ஒருவேளை தமக்கு முதல்வர் பதவியை பாஜக தர மறுத்தால் கணிசமான எம்.எல்.ஏக்களுடன் பாஜக மேலிடத்துக்கு எதிராக கலகத்தில் இறங்கவும் வசுந்தர ராஜே சிந்தியா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் டெல்லி பாஜக மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாம்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications