ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய நபர் திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சி! காதலி மரணம்.. என்ன நடந்தது?
முசாபர்நகர்: பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய போது அவரை சரியான நேரத்தில் காப்பாற்றியவர்களில் ஒருவர் ரஜத் குமார். இதற்காக அப்போதே பலரும் அவரை பலரும் பாராட்டி இருந்தனர். இதற்கிடையே ரஜத் குமார் இப்போது திடீரென தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிரபல கிரிகெட் வீரரான ரிஷப் பண்ட் டெல்லி-டேராடூன் சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது விபத்தில் சிக்கினார். மிக மோசமான விபத்தாக அது இருந்தது..

ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றியவர்:
டெல்லி- டேராடூன் சாலையில் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி என்ற பகுதியில் இந்த விபத்து அரங்கேறியது. நள்ளிரவில் நடந்த இந்த சாலை விபத்தில் ரிஷப் பண்டிகிற்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது. இருப்பினும், அங்கிருந்து சிலர் அவரை தக்க நேரத்தில் காப்பாற்றினார். இதன் காரணமாகவே அவரால் உயிர் தப்ப முடிந்தது. அதன் பிறகு தீவிர முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பியது தனிக்கதை.
ஆனால், அந்த நள்ளிரவு நேரத்தில் ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றியதில் முக்கியமானவர் 25 வயதான ரஜத் குமார். அப்போதே அவரை பண்ட் தொடங்கி பலரும் நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தனர். இதற்கிடையே இந்த ரஜத் குமார் திடீரென இப்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தனது காதலியுடன் இணைந்து திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
தற்கொலை முயற்சி:
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புச்சா பஸ்தி என்ற கிராமத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரஜத் குமாரும் அவரது 21 வயது காதலியான மனு காஷ்யப்பும் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களின் காதலுக்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில் காதலியான மனு காஷ்யப் உயிரிழந்துவிட்ட நிலையில், ரஜத் குமார் இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு பிரிவில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்ன காரணம்:
இருவரும் காதலித்து வருவது குடும்பத்தினருக்குத் தெரியும். இருப்பினும், அவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் காதலை ஏற்கவில்லை. மேலும், வேறு நபருடன் திருமணம் செய்து வைக்கவும் தயாராகி உள்ளனர். இதன் காரணமாகவே தற்கொலை முடிவை அவர்கள் எடுத்ததாக தெரிகிறது.
அதேநேரம் காஷ்ய தாய் தனது மகளின் மரணத்திற்கு ரஜத் குமார் தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகிறார். ரஜத் குமார் தான் தனது மகளைக் கடத்தி வலுக்கட்டாயமாக பாய்சன் கொடுத்து இருக்கலாம் என்றும் ரஜத் குமாரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications