தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ஆம் ஆத்மி ரூ. 10 லட்சம் நிதியுதவி
டெல்லி : டெல்லி பேரணியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ராஜஸ்தான் விவசாயியின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி பேரணி நடத்தியது. அப்போது ஜந்தர் மந்தரில் நடந்த பேரணியில் ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் பெயர் கஜேந்திர சிங். விவசாயத்தால் திவால் ஆகிவிட்டதால் அவர் தற்கொலை செய்து கொள்வதாக அவரது கடைசிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கஜேந்திர சிங்கின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் கூறுகையில், ‘நேற்று தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சிங்கின் குடும்பத்திற்கு ஆம்ஆத்மி சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது' என்றார்.
விவசாயி தற்கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக்சபாவில் அளித்த தகவல் குறித்து கூறுகையில், ‘லோக்சபாவில் ராஜ்நாத் சிங் பொய் சொல்கிறார். அவர் கூறியது போல் டெல்லி போலீஸ் எந்த தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அங்கு நடத்த காட்சிகளின் பதிவு மீடியாக்களிடம் உள்ளது. போலீசார் அவர்கள் கடமையை செய்யவிடாமல் நாங்கள் தடுத்தோமா? முகேஷ் குமார் மீனாவே நேற்று கூறுகிறார், விவசாயியை மரத்தில் இருந்து இறக்குவது போலீசாரின் வேலை இல்லை என்று' எனத் தெரிவித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications