வெள்ளம் பாதித்த தமிழகத்துக்கு உரிய உதவிகள் செய்யப்படும்: லோக்சபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
டெல்லி: லோக்சபாவில் தமிழக வெள்ளம் தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார்.
வடதமிழகத்தைக் குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 40 மணி நேரத்துக்கு அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரால் சென்னை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக உருமாறிப் போயுள்ளன.

இந்த வெள்ள நிலைமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று காலை பல்வேறு கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதை விவாதிக்க அனுமதியளிக்க முடியாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முதலில் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மேலும் பொதுவாக ஒத்திவைப்பு தீர்மானங்கள் தள்ளுபடி செய்யப்படுவதுதான் மரபாக இருந்து வருகிறது; கடந்த 3 வாரங்களாக சென்னை நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது;
தமிழ்நாடு முழுவதும் மழை, வெள்ளத்துக்கு 180-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்; பல்லாயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருதி இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது இன்று விவாதிக்க மத்திய அரசு விரும்புகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
இவ்விவாதத்தி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில், தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். சென்னை மக்களின் துயரத்தை நாடாளுமன்றம் உணர்ந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்யப்படும். தமிழக மீட்புப் பணிக்கு ராணுவம், கடற்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் பாதிப்பால் விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications