ராகுல் குறித்து சர்ச்சை பேச்சு... மே 16 வரை லக்னோவில் பொதுக்கூட்டம் நடத்த ராம்தேவுக்கு தடை
லக்னோ: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த யோகா குரு ராம்தேவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் மே 16 ஆம் தேதி வரை லக்னோவில் பொதுகூட்டங்கள் நடத்த அந்நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ராகுல் காந்தி தேனிலவு செல்வது போல் தலித் வீடுகளுக்கு சென்று வருகிறார் என்ற வகையில் பேசியிருந்தார் ராம்தேவ். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ராம்தேவ் மன்னிப்பு கோரும்படி வலியுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச போலீசார் ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹபிபுல் ஹசனகூறுகையில், "ராம்தேவின் பேச்சு பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீஸார் ஆய்வு செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்" என்றார்.
இதற்கிடையே தலித் மற்றும் ராகுல் குறித்த தனது கருத்துக்கு ராம்தேவ் வருத்தம் தெரிவித்தார். தனது கருத்து தலித்துகளுக்கு எதிரானது அல்ல என அவர் மன்னிப்பும் கேட்டார். ஆனபோதும், ராம்தேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களும், தலித் இயக்கங்களை சேர்ந்தோரும் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பல இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாபா ராம்தேவ், வரும் மே 16ம் தேதி வரை அதாவது லோக்சபா தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நாள் வரை லக்னோவில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை லக்னோ நிர்வாகம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications