ரூபாய் வாபஸ் முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டது அல்ல: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்
ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
மும்பை: 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்ற முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டது அல்ல என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், துணை ஆளுநர் ஆர்.எஸ்.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய உர்ஜித் பட்டேல், நீண்ட ஆலோசனைக்கு பிறகே பணம் வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது அரசுக்கு முன்பே தெரியும் என கூறிய அவர், ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்திற்கு பிறகு நாட்டில் உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிதத்தில் இருந்து, 7.1-ஆக குறையும் என ரிசர்வ் வங்கி கணக்கிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே புதிய 1000 ரூபாய் நோட்டுகள் பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணத்தட்டுப்பாடு நிலைமை சீரான பின்னர் பணம் எடுப்பதற்கான வரம்பு தளர்த்தப்படும் எனவும், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வருகவதாகவும் தெரிவித்துள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications