பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற உதவிய பெங்களூர் ஆர்.பி.ஐ அதிகாரி அதிரடி கைது
பெங்களூர்: செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக ரிசர்வ் வங்கியின் மூத்த சிறப்பு உதவியாளர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடகாவில் அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனையில் ஈடுபட்டது, அப்போது ரூ. 97 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனையானது நடந்து உள்ளது. அப்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிசெய்ததாக 7 இடைத் தரகர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு பணம் மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று கைது செய்யபட்டார்.இவர் சுமார் 1.51 கோடி ரூபாய் வரை புதிய நோட்டுகளாக மாற்ற இடைத்தரகர்களுக்கு உதவி செய்து உள்ளார்.












Click it and Unblock the Notifications