என்னதிது.. நடு ரோட்டுல வெள்ளையா.. பேயா இருக்குமோ.. நானே வருவேன்.. கேரள காட்டிலிருந்து ஒரு அலறல்!
வயநாடு அருகே 8 அடி உயர வெள்ளை உருவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Recommended Video
வயநாடு: "அது என்ன வெள்ளையா ஒரு உருவம்.. இப்படி நகர்ந்து போகுதே.. பேயா, பிசாசா?" என்ற கேள்வி கேரளாவையும் தாண்டி மக்களை அச்சத்துடன் கேள்வி எழுப்பி வருகிறது.
பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு நமக்கு எந்த யுகத்திலும் பதில் கிடைக்க போவது இல்லை. ஒரு பக்கம் விஞ்ஞானம் இல்லை என்கிறது.. மறுபக்கம் அதற்கான சாட்சிகள் ஏதாவது ஒரு ரூபத்தில் நடமாடி கொண்டே இருக்கிறது.

இப்போதும் ஒரு உருவம் நம் பார்வைக்கு வந்துள்ளது. இது கேரள மாநிலம் வயகாட்டில் நடந்துள்ளது சம்பவம். பொதுவாக, பில்லி, சூனியம், மாந்திரீகம் போன்றவைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் கேரள மாநிலத்தினர். சில சமயம், இங்குள்ள பகுதிகளில் ஆங்காங்கே பேய் நடமாட்டம் இருப்பதாக கூட செய்திகள் வெளிவருவது உண்டு.
அந்த வகையில், வயநாட்டில் பய்யாவூர் என்ற இடத்தில் ஒரு அமானுஷ்ய பெண் ரூபத்தின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
அது ஒரு ராத்திரி நேரம்.. பய்யாவூர் என்ற இடத்தில் செங்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அந்த வண்டியில் கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரெண்டு பக்கமும் மரங்கள், செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.
குறுகலான தெருபோல, மண் சாலை உள்ளது. லாரியில் 2 பேர் பேசிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஒரு வெள்ளை உருவம் திடீரென அந்த பக்கம் புதருக்குள் இருந்து வெளியே வருகிறது. 8 உயரத்துக்கு அந்த உருவம் உள்ளது.
அமானுஷ்ய பெண் உருவம் அது.. முழுக்க முழுக்க வெள்ளை உருவம்.. தலையை காணோம்.. மொத்தமாக வெள்ளை துணி போர்த்தியபடி உள்ளது. அந்த துணி மண்ணெல்லாம் புரண்டு வருகிறது. வெளிச்சம் பளிச்சென வீசுகிறது. ஒரு லாரி வருகிறதே என்றெல்லாம் தெரியவில்லை.. கூலாக அந்த பக்கத்தில் இருந்து மண் சாலையை கடந்த இந்த பக்கத்தில் நடந்து போகிறது.
இது பேயா, பிசாசா என்று தெரியவில்லை. இந்த வீடியோதான் வைரலாகி.. பீதியை கிலோ கணக்கில் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications