தற்காலிக எண்ணை பயன்படுத்த சொல்லும் ஆதார் அமைப்பு.. என்ன நடக்கிறது பின்னணியில்?
இனி ஆதார் எண்ணிற்கு பதிலாக தற்காலிக எண்ணை பயன்படுத்தும் படி ஆதார் அமைப்பு கூறியுள்ளது.
Recommended Video

டெல்லி: அனைத்தையும் ஆதார் அட்டையுடன் இணையுங்கள் என்ற காலம் போய் தற்போது ஆதார் அட்டைக்கு தற்காலிக எண் வாங்குங்கள் என்று ஆதார் அமைப்பு சொல்ல தொடங்கி இருக்கிறது. இது ஆதார் அமைப்பு மீது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த எண்ணை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று ஆதார் அமைப்பு ஒரு விளக்கம் கொடுத்துள்ளது. அதுதான் தற்போது ஆதார் அமைப்பு மீது சந்தேகத்தையே உருவாக்கி இருக்கிறது.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை ஏன் இப்போது இப்படி ஆகி இருக்கிறது என்று கேள்விகள் எழும்பி இருக்கிறது. முக்கியமாக மக்களுக்காக ஆதாரா? ஆதாருக்காக மக்களா? என்ற கேள்வியும் துரத்திக் கொண்டு இருக்கிறது.

ஆதார் தற்காலிக எண்
ஆதார் அறிமுகப்படுத்தி இருக்கும் தற்காலிக எண் என்பது 16 இலக்கம் கொண்டது. இனி அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணை காண்பிக்க தேவையில்லை, அதற்கு பதிலாக இந்த தற்காலிக எண்ணை பயன்படுத்தலாம். இது குறிப்பிட்ட காலத்திற்குள் காலாவதியாகிவிடும் என்பதால் பாதுகாப்பானது. இந்த எண்ணை ஆதார் மையம், இணையதளம், மொபைல் மூலம் பெறலாம்.

விளக்கம்
ஆதார் தகவல் திருட்டை தடுக்க இந்த புதிய முறை அறிமுகம் என்று ஆதார் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏனென்றால் தற்காலிக எண் மூலம் நம்முடைய ஆதார் எண் யாருக்கும் தெரியாது என்று கூறப்படுகிறது. மொபைல் மற்றும் மற்ற நிறுவனங்கள் இந்த ஆதார் விவரத்தை பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

அப்போது இதுவரை
இந்த விளக்கம் தான் தற்போது பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது. இனி ஆதார் விவரத்தை பாதுகாக்க இந்த திட்டம் அறிமுகம் என்றால் இதுவரை ஆதார் தகவல்கள் பாதுகாப்பு இன்றி இருந்துள்ளதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இனி இந்த தற்காலிக எண்ணை கொடுத்தால் போதும் என்று ஆதார் அமைப்பு அழுத்தி சொல்கிறது. இதுவரை ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைத்தவர்கள் கதி என்ன என்று தற்போது கேள்வி எழும்பி இருக்கிறது.

திருட்டு
ஏற்கனவே பஞ்சாப்பில் ஒரு வாட்ஸ் குழு அனைவருடைய ஆதார் விவரத்தை வெளியிட்டது பிரச்சனையை கிளப்பியது. அந்த பிரச்சனை உருவான இரண்டே நாளில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 16 இலக்க எண் என்பது வெறும் 16 இலக்க எண்ணின் பிரச்சனை இல்லை 110 கோடி மக்களின் பிரச்சனை என்பது ஆதார் அமைப்பிற்கு தெரியாமல் இருக்கிறதா?
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications