ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. இலவச சலுகை மார்ச் 31வரை நீடிப்பு
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த இலவச சேவை இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதியோடு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அழைப்புகள், அளவற்ற இணையதள சேவைகளை இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியளித்தது. இதையடுத்து இதுவரை 5 கோடி பேர் ஜியோ சிம்களை வாங்கியுள்ளனர். இந்நிலையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், வெளியிட்ட அறிவுறுத்தல்படி, எந்த ஒரு நிறுவனமும், தனது வரவேற்பு சலுகையை 3 மாதங்களுக்கு மிகாமல்தான் தர வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி ஜியோ தனது இலவச சேவையை ஆரம்பித்து, நாளை மறுநாள் 3ம்தேதியோடு 90 நாட்கள் நிறைவடையும். எனவே அதன்பிறகு இலவச அழைப்பு தரமுடியாதோ என்ற ஐயப்பாடு, ஏற்கனவே வாடிக்கையாளர்களானவர்களுக்கு ஏற்பட்டது. மேலும், டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு ஜியோ சிம் வாங்குவோருக்கு இலவசம் கிடைக்காதோ என்ற சந்தேகமும் இருந்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ வாடிக்கையாளர்கள் மனதில் பால் வார்த்துள்ளார். அவர் கூறுகையில், "ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளவற்ற அழைப்பு மற்றும் இணையதள சேவையை வழங்கி வருகிறோம். இந்த ஸ்கீம் ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. ஆனால், ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு புத்தாண்டு சலுகை என்ற பெயரில் இதே ஸ்கீமை தொடருவோம். எனவே அளவற்ற அழைப்புகள் மற்றும் இணைய சேவை இலவசமாகவே தொடரும். மார்ச் 31ம் தேதிவரை இந்த சலுகை தொடரும். இதற்காக சிம்மை மாற்ற வேண்டிய தேவையெல்லாம் கிடையாது. டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு சிம் வாங்குவோருக்கும், மார்ச் 31ம் தேதிவரை இலவசம் தொடரும்" என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications