ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. இலவச சலுகை மார்ச் 31வரை நீடிப்பு
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த இலவச சேவை இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதியோடு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அழைப்புகள், அளவற்ற இணையதள சேவைகளை இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியளித்தது. இதையடுத்து இதுவரை 5 கோடி பேர் ஜியோ சிம்களை வாங்கியுள்ளனர். இந்நிலையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், வெளியிட்ட அறிவுறுத்தல்படி, எந்த ஒரு நிறுவனமும், தனது வரவேற்பு சலுகையை 3 மாதங்களுக்கு மிகாமல்தான் தர வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி ஜியோ தனது இலவச சேவையை ஆரம்பித்து, நாளை மறுநாள் 3ம்தேதியோடு 90 நாட்கள் நிறைவடையும். எனவே அதன்பிறகு இலவச அழைப்பு தரமுடியாதோ என்ற ஐயப்பாடு, ஏற்கனவே வாடிக்கையாளர்களானவர்களுக்கு ஏற்பட்டது. மேலும், டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு ஜியோ சிம் வாங்குவோருக்கு இலவசம் கிடைக்காதோ என்ற சந்தேகமும் இருந்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ வாடிக்கையாளர்கள் மனதில் பால் வார்த்துள்ளார். அவர் கூறுகையில், "ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளவற்ற அழைப்பு மற்றும் இணையதள சேவையை வழங்கி வருகிறோம். இந்த ஸ்கீம் ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. ஆனால், ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு புத்தாண்டு சலுகை என்ற பெயரில் இதே ஸ்கீமை தொடருவோம். எனவே அளவற்ற அழைப்புகள் மற்றும் இணைய சேவை இலவசமாகவே தொடரும். மார்ச் 31ம் தேதிவரை இந்த சலுகை தொடரும். இதற்காக சிம்மை மாற்ற வேண்டிய தேவையெல்லாம் கிடையாது. டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு சிம் வாங்குவோருக்கும், மார்ச் 31ம் தேதிவரை இலவசம் தொடரும்" என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications