இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை: சொல்வது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கே இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

நாக்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் பேசுகையில், "இந்தியாவில், இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்கிற கேள்விக்கே இடமில்லை, இதுவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தாகும். நீண்ட காலமாக சமூக பாகுபாடு நிலவி வரும் இந்திய சமூகத்தில் இட ஒதுக்கீடு தொடரும். சமுதாயத்தின் பன்முகத் தன்மைக்கு மதிப்பு கொடுத்து இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். ஆனாலும் இந்துத் துவத்தின் தத்துவங்கள் மற்றும் உணர்வுகளை பின்பற்ற வேண்டும்." என்றார்.

Reservations must be canceled out of the question, says RSS. Chief Mohan Bhagwat

இடஒதுக்கீடு என்பதை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகின்றனர். இதனை முடிவுக்குக் கொண்டுவர இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் அரசியல் சாராத ஒரு குழுவை அமைத்து யாருக்கு இடஒதுக்கீடு தேவை? எவ்வளவு காலத்துக்கு தேவை என்பது குறித்து ஆராய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட இன மக்களின் போராட்டத்திற்கு பணிந்து இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டால், இடஒதுக்கீடு அரசியலாக்கப்பட்டு விடும். அதேபோல் கல்வி திட்டத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும். என மோகன் பகவத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். மோகன் பகவத்தின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+