லக்விக்கு ஜாமீன் வழங்குவதா?- பாகிஸ்தானை கண்டித்து லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றம்!!
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஷகி உர் லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்ததைக் கண்டித்து லோக்சபாவில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான லக்விக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதற்கு இந்தியா தனது கவலையை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று லோக்சபாவின் பாகிஸ்தானின் செயலை கண்டித்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மான நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் நடவடிக்கையிலும் இந்தியா தனது அழுத்தத்தை அளிக்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதி லக்விக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் அதிர்ச்சியடை செய்துள்ளது என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடப்போவதாக பாகிஸ்தான் அரசு கூறும் நிலையில் தீவிரவாதி லக்விக்கு அந்நாட்டு நீதிமன்றம் எதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இதிலிருந்து பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அனைத்தும் பெயரளவில் தான் என்று தெரிகிறது.
தீவிரவாதி லக்விக்கு எதிரான குற்றம் நிரூபிக்க முடியவில்லை, அவருக்கு எதிராக தக்க ஆதாரம் இல்லை என்று தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனடியாக தீவிரவாதி லக்விக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications