ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் நிதி:ஓய்வுபெற்ற ஐஏஎஸ் பாலச்சந்திரனுக்கு ஒரு விசில் போடுங்க
ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
பெங்களூரு : ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இது தான் மிக அதிகத் தொகை.
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ. 45 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்காக பலரும் நிதி கொடுத்து வந்த போதும், நிதிப்பற்றாக்குறை நிலவி வருகிறது.

கமல் ரூ. 20 லட்சம்
தமிழக அரசு தன்னுடைய பங்காக தமிழ் இருக்கை அமைக்க ரூ. 10 கோடி நிதி உதவி தருவதாக கூறியுள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தமிழ் இருக்கைக்காக ரூ. 20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
ரூ. 25 லட்சம் நிதி
இதே போன்று நடிகர் விஷாலும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். இதே போன்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரனும் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ்
சிவகங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் மேற்குவங்க மாநில கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஊழல் விவகாரத்தில் தைரியமாக தன்னுடைய பணிக்காலத்திலேயே முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் பாலச்சந்திரன். இந்தியாவைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ரூ. 25 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார், இதுவரை பெறப்பட்ட நிதிகளிலேயே இது தான் அதிக நிதியுதவி.

தமிழ் ஆசிரியர் தந்தது தான்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் நிதியுதவி அளித்ததை விட 82 வயது ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் ரூ. 8 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார். தமிழ் இருக்கை அமைக்க முடிந்தவர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications