தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா பிரணாப் முகர்ஜியுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வீட்டில் நடைபெறும் மகாசண்டியாகத்தில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா இன்று சந்தித்துப் பேசினார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது சொந்தப் பணம் ரூ.20 கோடி செலவில், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த யாகம் இன்றுடன் நிறைவடைகிறது.

Rosaiah called on President Mukherjee in Hyderabad

இந்த பூஜையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆந்திரா,கர்நாடகா,தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்காக, தெலுங்கானாவுக்கு வந்துள்ள குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழ்நாடு ஆளுநர் கே.ரோசைய்யா இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+