Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் ரோசய்யா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழக ஆளுநர் ரோசய்யா கர்நாடக மாநில ஆளுநராக இன்று கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கர்நாடக மாநிலத்தின் 14வது ஆளுநரான ஹெச்.ஆர். பரத்வாஜின் பதவிக்காலம் சனிக்கிழமை முடிந்தது. எனவே அவர் மாநில மக்களிடம் இருந்து விடைபெற்று தனது சொந்த ஊரான டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். இதையடுத்து கர்நாடக மாநில ஆளுநர் பதவியை தமிழக ஆளுநர் ரோசய்யா கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டது.

Rosaiah sworn in as Karnataka Governor

அதன்படி அவர் இன்று காலை கர்நாடக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பெங்களூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய முழுநேர ஆளுநர் நியமிக்கப்படும் வரை ரோசய்யா இந்த கூடுதல் பொறுப்பை கவனித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+