புதிய சர்ச்சை... அவசர சட்டம் மூலம் பிரதமரின் முதன்மை செயலர் மிஸ்ரா நியமனம் ..காங், கேள்வி!!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 1967-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி 69 வயதான நிருபேந்திர மிஸ்ரா ஆவார். இவர் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து உள்ளார். கடைசியாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் தலைவராக இருந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு மிஸ்ரா அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவசர சட்டம்
டிராய் அமைப்பில் தலைவர் அல்லது உறுப்பினராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள் அதன்பிறகு மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ வேறு எந்த பதவிக்கும் நியமிக்க முடியாது என்கிறது டிராய் சட்டம். அதாவது பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர்கள் வேறு பதவி வகிக்க டிராய் சட்டம் தடை விதிக்கிறது.
அந்த தடையை நீக்கி டிராய் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை நேற்று மத்திய அரசு பிறப்பித்து அதன் அடிப்படையில் நிருபேந்திர மிஸ்ராவை பிரதமரின் முதன்மை செயலாளராக நியமித்து உள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நிருபேந்திர மிஸ்ரா முக்கிய சாட்சிகளில் ஒருவர் ஆவார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது நிருபேந்திர மிஸ்ரா தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக இருந்தார். ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, டிராய் தலைவராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவசர சட்டம் ஏன்?
இதனிடையே நாட்டின் நாடாளுமன்றம் இன்னும் கூடவில்லை.. புதிய எம்.பிக்கள் பதவியேற்கவில்லை.. இந்த நிலையில் அவசர சட்டம் மூலம் பிரதமரின் முதன்மை செயலரை அவசரம் அவசரமாக நியமிக்க வேண்டிய தேவை என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கேள்வி எழுப்பி மற்றொரு சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications