இனி டெபிட் கார்டு மூலம் பிக் பஜாரில் ரூ 2,000 பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு
பிக் பஜாரில் டெபிட் கார்டு மூலம் ரூ.2000 பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நவம்பர் 24-ம் தேதி முதல் பிக் பஜாரில் டெபிட் கார்டு மூலம் ரூ.2,000 பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பணம் எடுக்க வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் அலைமோதி வருகின்றனர். வங்கிகளில் பணம் மாற்றுவதற்கு வரிசையில் நின்று கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இனி பிக் பஜாரில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. வரும் 24 ம் தேதி முதல் டெபிட் கார்டு மூலம் ரூ.2000 பணம் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications