மணிப்பூரில் திடீரென எப்படி கலவரம் வந்தது? “வெளிப்புற” சக்திகளின் சதி.. RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு
நாக்பூர்: மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், வடகிழக்கு மாநிலத்தின் அசாதாரண நிலைமைக்கு வெளிப்புற சக்திகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டதன் 98வது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுப் பேசினார்.

மோகன் பகவத் பேசுகையில், "மணிப்பூர் ஒரு எல்லைப்புற மாநிலம். மணிப்பூர் வன்முறையில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மைத்தேயி - குக்கி சமூக மக்கள் அங்கு நீண்டகாலம் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். திடீரென அங்கு எப்படி கலவரம் மூண்டது? இதை திட்டமிட்ட சதியாகவே எண்ண முடியும். இந்த மோதல்களால் வெளிநாட்டு சக்திகளுக்கு நன்மை உண்டாகும். இதில் ஏதாவது வெளிநாட்டு சதிகள் இருக்கின்றனவா? தற்போது ஏற்பட்டிருக்கும் பிரிவினைவாதத்தினாலும் உள் முரண்பாடுகளினாலும் யாருக்கு நன்மை?
இந்த முரண்பாடுகள் அனைத்தும் வெளி சக்திகளுக்குத்தான் பலன் தரும். அங்கு நடந்த சம்பவத்தில் வெளியிலிருந்து வந்தவர்கள் ஈடுபட்டார்களா... மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் மூன்று நாள்கள் இருந்தார். உண்மையில் மோதலை தூண்டியது யார்... வன்முறை அங்கு நடக்கவில்லை, நடத்தி வைக்கப்படுகிறது.
மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டுச் சக்திகள் ஆர்வமாக இருக்கலாம். தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலுக்கும் இந்த நிகழ்வுகளில் பங்கு இருக்கிறதா எனப் பல கேள்விகள் எழுகின்றன. அமைதியை மீட்டெடுக்கும்போது ஏற்படும் பல சம்பவங்கள் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்துகின்றன.
இது போன்ற செயல்களைச் செய்தவர்களின் பின்னணியில் இருப்பது யார்? வன்முறையைத் தூண்டுவது யார்? ஒற்றுமையை விரும்புபவர்கள் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளால் மனம் தளராமல் அமைதியாகவும், நிதானத்துடனும் பணியாற்ற வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்ட சங் பரிவார்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார்.
மேலும் பேசிய மோகன் பகவத், "வாக்குகளைப் பெறுவதற்காக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கும். இதுபோன்ற முயற்சிகள் நடந்தாலும், வாக்காளர்கள் தங்களுக்கு முன் இருக்கும் சிறந்த விருப்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் மக்கள் அனைவரையும் பார்த்திருக்கிறார்கள். இப்போது அதிலிருந்து சிறந்த தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்." என மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
வாக்குகளைப் பெறுவதற்காக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கும். இதுபோன்ற முயற்சிகள் நடந்தாலும், வாக்காளர்கள் தங்களுக்கு முன் இருக்கும் சிறந்த விருப்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் மக்கள் அனைவரையும் பார்த்திருக்கிறார்கள். இப்போது அதிலிருந்து சிறந்த தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தாய்நாட்டின் மீதான பக்தி, முன்னோர்கள் மீதான பெருமை, பொது கலாச்சாரம் ஆகிய மூன்று கூறுகள், மொழி, பகுதி, மதம், பிரிவு, ஜாதி மற்றும் உட்பிரிவுகள் ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் ஒன்றிணைத்து நம்மை ஒரே தேசமாக்குகின்றன. இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த நம்பிக்கைகள் இந்த கூறுகளை நிலைநிறுத்த வேண்டும்.
கலாசார மார்க்சிஸ்டுகள் அராஜகம், குழப்பம் மற்றும் ஊழலை ஊக்குவித்து அதிகப்படுத்துகின்றன. ஊடகங்கள், கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் அவர்களின் செல்வாக்கு மூலம், அவர்கள் சமூக ஒழுங்கு, ஒழுக்கம், கலாசாரம், கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைச் சீர்குலைக்க முற்படுகின்றனர்." எனப் பேசியுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications