பம்பை ஆற்றில் வடியாத வெள்ளப்பெருக்கு.. மூடப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்!
சபரிமலை கோயில் இழுத்து மூடப்பட்டது.
Recommended Video

சபரிமலை: வரலாறு காணாத வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்திற்கு தனி பெருமையையும், அந்தஸ்தையும், சிறப்பையும், அடையாளத்தையும், மகிமையையும் அள்ள அள்ள குறையாமல் கொடுத்து கொண்டிருப்பது சபரிமலை ஐயப்பன் கோயில்.
உலக புகழ்பெற்ற இந்த கோயில் பம்பை ஆற்று பகுதியில் உள்ளது. இயற்கை அன்னை தற்போது கேரளா மீது கடுமையான சீற்றம் கொண்ட காரணமாக அந்த மாநிலமே தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது. வீடு, வாசல், துணிமணிகள், பாத்திர, பண்டங்கள் ஏதுமின்றி மக்கள் திணறி வருகிறார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் முடிந்த அளவு உதவி வருகிறார்கள். அதனால் ஓரளவு அம்மாநில மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டு வரும் மக்கள்
உலக புகழ்பெற்ற இந்த கோயில் பம்பை ஆற்று பகுதியில் உள்ளது. இயற்கை அன்னை தற்போது கேரளா மீது கடுமையான சீற்றம் கொண்ட காரணமாக அந்த மாநிலமே தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது. வீடு, வாசல், துணிமணிகள், பாத்திர, பண்டங்கள் ஏதுமின்றி மக்கள் திணறி வருகிறார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் முடிந்த அளவு உதவி வருகிறார்கள். அதனால் ஓரளவு அம்மாநில மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

களிமண்-சேறு
இந்நிலையில் இன்னும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டே இருக்கிறது. பத்தினம்திட்டா மாவட்டம் மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வடியவே இல்லை. அத்துடன் ஐயப்பன் கோயிலுக்குள்ளும் இந்த வெள்ள நீர் சென்றுவிட்டது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் களிமண்ணும், சேறுமாக கிடக்கிறது. அந்த பகுதியில் உள்ள மரங்களும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.

கோயில் மூடப்பட்டது
இதனால் வரும் 23-ம் தேதி முதல் ஓணம் பண்டிகைக்கான பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடங்க உள்ளதைகூட, கேரள அரசு ரத்து செய்துவிட்டது. இது இல்லாமல், ஐயப்பன் கோயிலுக்கு ஓணம் பண்டிகைக்காக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கேட்டுக் கொண்டதுடன், கடந்த 13-ம் தேதியன்று கோயிலையும் மூடியது.

பூஜைகள் தொடர்ந்து நடக்கும்
தற்போது பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் ஐயப்ப போயிலின் அடுத்த அறிவிப்பு வரும்பரை கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்றும் தெரிவித்துள்ளது. கோயிலை மூடினாலும் அனைத்து பூஜைகளும் தொடர்ந்து நடக்கும் என கூறப்படுகிறது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications