ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. 21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம்!
சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, ஒவ்வொரு மாதத்திலும் முதல் 5 நாட்களில் திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
சபரிமலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டி யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனை எழுப்பி உள்ளார்.

கற்பூர ஆழியில் தீபம் ஏற்றியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். நடை திறப்பையொட்டி, சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறவில்லை. கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் தரிசனத்திற்காகவும், சபரிமலையில் தங்கவும் sabarimalaonline.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (Travancore Devaswom Board) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரிசன நேரங்களில், "இருமுடி"யுடன் 18 ஆம் படி ஏறி வரும் பக்தர்களும், இருமுடி இல்லாமல் 18ஆம் படி ஏறாமல் விரதம் மட்டும் இருந்து "சிவில் தரிசன" வரிசையில் வரும் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே "சிவில் தரிசனம்" அனுமதிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போடு அறிவித்துள்ளது.
இன்று திறக்கப்பட்டுள்ள நடை வருகிற 21 ஆம் தேதி வரை திறந்திருக்கும் எனவும், காலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது? -
பேச்சுவார்த்தை, சொதப்பல், ரிப்பீட்டு.. காங்கிரஸால் வெல்லும் பாஜக! தேர்தல் வந்தா இதே வேலையா போச்சு -
விடியும்போது பனிமூட்டம்.. விடிந்த பிறகு படுத்தி எடுக்கும் வெப்பம்.. தமிழ்நாட்டை குழப்பும் வானிலை! -
"பயமாக இருக்கு.. எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு சத்தம்!" வளைகுடாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் கண்ணீர் -
பயப்பட வேண்டாம் என்று.. கூட்டணி கட்சியிடம்தான் பிரதமர் மோடி சொல்ல வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்! -
ஈரான் கடல் பகுதியில் சிக்கிய தமிழக மீனவர்கள்! நிலைமை என்ன? கன்னியாகுமரி மக்கள் அச்சம்! -
கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு.. உடனே அனுமதி வழங்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -
எப்போதும் இல்லாத அளவு அனல் கக்கப்போகுது.. 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசும்.. வானிலை மையம் வார்னிங்! -
லண்டன் டூ சென்னை.. ரூ. 400 கோடி சொத்து.. சங்கீதாவின் 'சைலண்ட்' சாம்ராஜ்யம்? எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்! -
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு












Click it and Unblock the Notifications