ஐயப்பன் இளம்வயதில் களரி பயின்ற ஆலப்புழா முகம்மா... முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் புனித தலம்
ஆலப்புழா: சபரிமலை ஐயப்பன் சீசன் காலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடிய திருத்தலங்களில் ஒன்று ஆலப்புழா முக்கால்வட்டம் ஐயப்பன் கோவிலும் ஒன்று.
ஐயப்பன் யாத்திரை செல்லும் பக்தர்கள் எரிமேலி, ஐயப்பன் சந்நிதானம் என்று மட்டும் நின்றுவிடுவதில்லை. கேரளா, தமிழகத்தில் உள்ள சில ஐயப்பன் கோவில்களிலும் தரிசனம் செய்வர்.
அப்படியான இடங்களில் ஒன்று ஆலப்புழா முகம்மா. இங்குதான் ஐயப்பன் இளம்பிராயத்தில் களரி எனும் தற்காப்பு கலையை கற்றதாக நம்பிக்கை உள்ளது. சபரிமலை யாத்திரையாக மலை ஏற முடியாதவர்கள் இங்கே வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
சபரிமலை போக முடியாத தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள்.. இப்போது எங்கு போகிறார்கள் தெரியுமா?
இந்த கோவிலை குரு சீரப்பன் பரம்பரைதான் நிர்வாகித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஐயப்பன் சுவாமியின் முக்கால் பங்கு சைதன்யம் குடிகொண்டிருக்கிறது. ஆகையால் முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் என்றும் இது அழைக்கப்படுகிறது.
இதே இடத்தில் பூழியங்கம் என்கிற கலையையும் ஐயப்பன் சுவாமிகள் கற்றதாகவும் அந்த கோலத்திலேயே இங்கே ஐயப்பன் தரிசனம் தருகிறார் என்பதும் நம்பிக்கை. சபரிமலைக்கு செல்வதற்கு முன்பாக ஐயப்பன் கொடுத்து சென்ற கச்சையும் வாளும் இங்கே புனிதமாக இப்போதும் பூஜிக்கப்பட்டும் வருகிறது.