மவுனம் கலைத்த சாகித்ய அகாடமி... கல்பர்கி படுகொலைக்கு கண்டனம் - எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்!
டெல்லி: நீண்ட மவுனத்துக்குப் பின்னர் எழுத்தாளர் கல்பர்கி படுகொலைக்கு சாகித்ய அகாடமி கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள் அதனை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்பர்கி உள்ளிட்டோர் மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டதை அந்த அமைப்பு கண்டிக்கவில்லை. இது தொடர்பாக மவுனம் சாதித்து வந்தது.

இதனைக் கண்டிக்கும் வகையில் இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற பலரும் அந்த விருதை அந்த அமைப்புக்கே திருப்பி அனுப்பி வைத்து வந்தனர். ஒரு சிலர் சாகித்ய அகாடமி பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தனர்.
மேலும் சாகித்ய அகாடமியைக் கண்டித்தும் அந்த அமைப்புக்கு ஆதரவாகவும் பேரணிகளும் நடைபெறன. இதனைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் எழுத்தாளர் கல்பர்கி கொலைக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டு தீர்மானம் நிறைவேற்றிய சாகித்ய அகாடமி, அத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்கள் மீண்டும் விருதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சாகித்ய அகாடமி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த கூட்டம் குறித்து அகாடமியின் செயற்குழு வாரிய உறுப்பினர் கிருஷ்ணசுவாமி நாச்சி முத்து கூறும்போது, எழுத்தாளர் கல்பர்கி கொலையை அகாடமி கடுமையாக கண்டிக்கிறது.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கொலைகளைக் கண்டிப்பதில் அனைத்து எழுத்தாளர்களும் ஒருமனதாக நிற்கிறோம்.
பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கையும் கண்டித்துள்ளோம், அந்த பிரச்சினையையும் எழுப்பியுள்ளோம். விரைவில் சாகித்ய அகாடமியின் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி நிற்கவில்லை என்று குற்றம்சாட்டி சாகித்ய அகாடமியின் அனைத்து பதவிகளையும் துறந்த எழுத்தாளர் கே.சச்சிதானந்தன் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications