மவுனம் கலைத்த சாகித்ய அகாடமி... கல்பர்கி படுகொலைக்கு கண்டனம் - எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்!
டெல்லி: நீண்ட மவுனத்துக்குப் பின்னர் எழுத்தாளர் கல்பர்கி படுகொலைக்கு சாகித்ய அகாடமி கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள் அதனை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்பர்கி உள்ளிட்டோர் மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டதை அந்த அமைப்பு கண்டிக்கவில்லை. இது தொடர்பாக மவுனம் சாதித்து வந்தது.

இதனைக் கண்டிக்கும் வகையில் இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற பலரும் அந்த விருதை அந்த அமைப்புக்கே திருப்பி அனுப்பி வைத்து வந்தனர். ஒரு சிலர் சாகித்ய அகாடமி பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தனர்.
மேலும் சாகித்ய அகாடமியைக் கண்டித்தும் அந்த அமைப்புக்கு ஆதரவாகவும் பேரணிகளும் நடைபெறன. இதனைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் எழுத்தாளர் கல்பர்கி கொலைக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டு தீர்மானம் நிறைவேற்றிய சாகித்ய அகாடமி, அத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்கள் மீண்டும் விருதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சாகித்ய அகாடமி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த கூட்டம் குறித்து அகாடமியின் செயற்குழு வாரிய உறுப்பினர் கிருஷ்ணசுவாமி நாச்சி முத்து கூறும்போது, எழுத்தாளர் கல்பர்கி கொலையை அகாடமி கடுமையாக கண்டிக்கிறது.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கொலைகளைக் கண்டிப்பதில் அனைத்து எழுத்தாளர்களும் ஒருமனதாக நிற்கிறோம்.
பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கையும் கண்டித்துள்ளோம், அந்த பிரச்சினையையும் எழுப்பியுள்ளோம். விரைவில் சாகித்ய அகாடமியின் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி நிற்கவில்லை என்று குற்றம்சாட்டி சாகித்ய அகாடமியின் அனைத்து பதவிகளையும் துறந்த எழுத்தாளர் கே.சச்சிதானந்தன் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications