தேர்தல் தோல்வி எதிரொலி: சமாஜ்வாதி கட்சி அமைப்பு கூண்டோடு கலைப்பு
லக்னொ: நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் உ.பியிலுள்ள 80 தொகுதிகளில் வெறும் 5ல் மட்டுமே ஆளும் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றது. 73 இடங்களை மொத்தமாக பாஜக சுருட்டி அள்ளியது. இதனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும், உ.பி முதல்வர் அகிலேஷ்யாதவும் அதிர்சியடைந்துள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் 36 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இன்று, அக்கட்சியின் உ.பி அமைப்பு ஒட்டுமொத்தமாக கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் அகிலேஷ் யாதவ் மட்டும் கட்சியின் அமைப்பு தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாததால் வெறுத்துப்போன பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கட்சியையும் கூண்டோடு கலைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications