For Daily Alerts
Just In
ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு.. மின் சேவை பாதிப்பு
ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்றிரவு கடுமையான புழுதி புயல் தாக்கியது. இந்த புழுதி புயலில் பரத்பூர், ஆல்வார், தோல்பூர் ஆகிய மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பரத்பூர் மாவட்டத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தோல்பூர் மாவட்டத்தில் 6 பேரும் ஆல்வார் மாவட்டத்தில் 4 பேரும் ஜூன்ஜுனுவில் ஒருவர் உயிரிழந்தனர்.
பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. இதனால் பல இடங்களில் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைத்திட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
Sand storm hits in Rajasthan kills 22. electricity posts and trees uprooted in many districts of the state.