நாட்டிலேயே முதல் முறை.. ராஜஸ்தான் மழலையர் பள்ளிகளில் இனி சமஸ்கிருதம் கட்டாயம்
ஜெய்பூர்: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்து வருகிறது. அதிலும் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமஸ்கிருத மொழிக்கு என்று மாதிரி பள்ளி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டிலேயே முதல்முறையாக ராஜஸ்தான் மாநில மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
மத்திய பாஜக அரசு மும்மொழி கல்வி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக பல்வேறு மாநிலங்களில் புகார் உள்ளது. பல மாநிலங்களில் மும்மொழி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் பாஜக அரசு சமஸ்கிருத மொழிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதாகவும் புகார் எழுந்து வருகிறது.

சமஸ்கிருதம் கட்டாயம்
கடந்த 10 வருடங்களில் பயன்பாட்டிலேயே இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு ரூ.113 கோடி மட்டுமே ஒதுக்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சமஸ்கிருதம் மொழிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம் மொழி கட்டாயம் என்கிற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம்
நாட்டிலேயே முதல்முறையாக பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகேஜி, எல்கேஜி, யூகேஜி உள்ளிட்ட வகுப்புகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயப் பாடம் ஆகியுள்ளது. இது அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சமஸ்கிருத கல்வித்துறை ஆணையர் பிரியங்கா ஜோத்வட் கூறுகையில், "சமஸ்கிருதம் கட்டாயமாக்குவது தொடர்பான பரிந்துரையை இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே மத்திய அரசுக்கு அனுப்பினோம்.
இதற்கான பாடத்திட்டம், புத்தகம் ஆகியவை தயாரிக்கப்பட்டுவிட்டன. அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் வழங்கிவிட்டால் பாடத்தை தொடங்கிவிடுவோம்." என்றார். ராஜஸ்தான் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த சமஸ்கிருத புத்தகங்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்சிஇஆர்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.
மீண்டும் மீண்டும்
குழந்தைகளை ஈர்க்கும் வகையில் எளிதாகவும், காமிக்ஸ் வடிவிலும் புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜஸ்தான் மாநில கல்வித்துறை கூறியுள்ளது. மாணவர்களுக்கு அடிப்படை மொழியாக்கம், இலக்கணம் பயிற்சி கொடுக்கப்படும். என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில அரசுப் பள்ளிகளில் உறுதி மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் இணைக்கப்பட்டு பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications