இப்படி எல்லோரையும் டிரான்ஸ்பர் செய்வதற்கு பேசாமல் சசிகலாவை திகாருக்கு அனுப்பிடலாமே?
சிறையில் சசிகலா முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் சிறை துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதற்கு பதிலாக பேசாமல் சசிகலாவை திகாருக்கு டிரான்ஸ்பர் செய்துவிடலாமே.
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறை துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு பதிலாக சசிகலாவை திகாருக்கு அனுப்பிவிடுவதுதான் சரியாக இருக்கும் என்கின்றன கர்நாடகா போலீஸ் வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து பதவிக்காக வெறியாட்டம் போட்ட சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கும் அவர் அடங்க மறுத்து அவ்வப்போது விதிமீறல்களை மீறி வருவதாக செய்திகள் வெளியாகின.

டிஐஜி ரூபா ஆய்வு
இந்நிலையில் சிறை துறை டிஐஜியாக உள்ள ரூபா கடந்த வாரம் பெங்களூர் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறைத் துறையில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. மேலும் சசிகலாவுக்கு கூடுதல் சலுகைகள் கொடுப்பதாகவும், அவர் சிறையைவிட்டு ஓரிரு முறை வெளியே சென்றுள்ளார் என்றும் சக கைதிகள் உண்மையை உடைத்தனர்.

சசிகலா அறையில் சமையலறை
அதன்பேரில் சசிகலா அறையில் சென்று ஆய்வு செய்தபோது அங்கு அவருக்கென்று சமையலறை இருந்தது தெரியவந்தது. மேலும் சசிகலா, பார்வையாளர்களை சந்திப்பதற்காக தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுபோன்ற சிறப்பு வசதிகளை பெற சசிகலா சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

உயரதிகாரிக்கு கடிதம்
இதைத் தொடர்ந்து இந்த முறைகேடுகள் குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு ரூபா கடிதம் எழுதினார். இதனால் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் புயல் கிளம்பியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் இடமாற்றம்
இதனிடையே சசிகலாவுக்கு உதவிய கைதிகள் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ரூபா, அதில் சம்பந்தப்படுத்தப்பட்ட சத்திய நாராயண ராவ், சிறைத் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் என 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிலும் ராவ் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.

பழி ஒரு புறம்
இந்த அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்தாலும் சசிகலா மீண்டும் ஆட்டம் போடமாட்டார் என்பது என்ன நிச்சயம். பழி ஒரு புறம் பாவம் ஒரு புறம் என்பதை போல் தவறிழைத்த சசிகலாவை திகார் சிறைக்கு மாற்றாமல் மற்ற அதிகாரிகளை மாற்றி என்ன பயன்? என்பது கர்நாடக போலீசாரின் குமுறல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications